Sunday, June 11, 2017

பெருஞ்செல்வம் அடைய


வையம் துரகம் மதகரி
மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை
ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்
தாமரைக்(கு) அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்குள
வாகிய சின்னங்களே

கடன்தீர, பெருஞ்செல்வம் அடைய

இல்லாமை சொல்லி ஒருவர்தம்
பால்சென்(று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்
பால்ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே