Saturday, May 24, 2014

மந்திர வகைகள்


மந்திரம் என்ற சொல்  நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பொதுவாக 1. மூல மந்திரம், 2. பீச மந்திரம், 3. பஞ்ச மந்திரம், 4. சடங்க மந்திரம், 5. சங்கிதா மந்திரம், 6. பத மந்திரம், 7. மாலா மந்திரம், 8. சம்மேளன மந்திரம், 9. காயத்திரி மந்திரம், 10. அசபா மந்திரம், 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம், 12. மாதிருகா மந்திரம், 13. மோன மந்திரம், 14. சாத்திய மந்திரம், 15. நாம மந்திரம், 16. பிரயோக மந்திரம், 17. அத்திர மந்திரம், 18. விஞ்சை மந்திரம், 19. பசிநீக்கு மந்திரம், 20. விண்ணியக்க மந்திரம், 21. வேற்றுரு மந்திரம், 22. துயில் மந்திரம், 23. திரஸ்கரிணீ மந்திரம், 24. சட்கர்ம மந்திரம், 25. அஷ்ட கர்ம மந்திரம், 26. பஞ்சகிருத்திய மந்திரம், 27. அகமருடண மந்திரம், 28. எகாஷர மந்திரம், 29. திரயஷரி மந்திரம், 30. பட்சாஷார மந்திரம், 31. சடஷர மந்திரம், 32. அஷ்டாஷர மந்திரம், 33. நவாக்கரி மந்திரம், 34. தசாஷர மந்திரம், 35. துவாதசநாம மந்திரம், 36. பஞ்சதசாக்கரி மந்திரம், 37. சோடஷாஷரி மந்திரம், 38. தடை மந்திரம், 39. விடை மந்திரம், 40. பிரசாத மந்திரம், 41. உருத்திர மந்திரம், 42. சூக்த மந்திரம், 43. ஆயுள் மந்திரம், 44. இருதய மந்திரம், 45. கவச மந்திரம், 46. நியாச மந்திரம், 47. துதி மந்திரம், 48. உபதேச மந்திரம், 49. தாரக மந்திரம், 50. ஜெபசமர்பண மந்திரம், 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
                 இவையன்றி 52. நீலகண்ட மந்திரம் , 53. மிருத்யுஞ்சய மந்திரம் , 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 55. சரப மந்திரம் , 56. வீரபத்ர மந்திரம் , 57. பைரவ மந்திரம் , 58. விநாயக மந்திரம் , 59. சண்முக மந்திரம் , 60. நரசிங்க மந்திரம் , 61. நவகிரக மந்திரம் , 62. வாலை மந்திரம் , 63. புவனை மந்திரம் , 64. திரிபுரை மந்திரம் , 65. துர்க்கை மந்திரம், 66. அசுவாரூடி மந்திரம், 67. சப்தமாதர் மந்திரம், 68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 69. பதினெண் கண மந்திரம், 70. யோகினியர் மந்திரம், 71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில்  ( நமது பாரத தேசத்தில் )  உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
              இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள். அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

பரணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

 "பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள், பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ இராசியில் இடம்பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ பிறந்தவர்கள், சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள், சரியான அளவு, அமைப்புடன் கூடிய உடல்வாகு தோற்ற பொலிவு கொண்டவர்கள், நல்ல ஆரோகியமும் நீண்ட ஆயுளும் கொண்டவர்கள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், எத்தகைய துன்பத்தினையும் மனதால் போட்டு குழப்பிகொள்ளாமல், அறிவுப்பூர்வமாக அதனை சிந்தித்து துன்பத்தில் இருந்து வெளியேறுபவர்கள், சாந்தமான சுபாவமும் இரக்க குணமும் இயற்கையிலேயே அமைய பெற்றவர்கள், அதிவேக சிந்தனையும் செயல்திறனும் கொண்டவர்கள், பிறரை எளிதாக புரிந்து கொள்பவர்கள், பிரயாணத்தில் அதிக ஆர்வம் கட்டுவார்கள், காதல் மன்னர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள், திட சித்தம் இல்லாதவர்கள், இவர்கள் அதிகமான பகைவர்களை உண்டாக்கி கொள்வார்கள்.இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் :

பரணி நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் காளி அல்லது துர்க்கை ஆகும்.பரணி நட்சத்திர அதி தேவதை யமன், இந்த பூவுலகில் பிறந்த உயிரினங்களின் ஆயுளை முடிப்பவன் யமனே, நீல நிற தேகம்கொண்டு கையில் பாசமும் தண்டமும் ஏந்தி, நீதியில் கூரான தராசு முள்போல நடுநிலை காப்பவன். எருமை வாகனம் ஏறுபவன், சூர்யனுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தவன், சனீஸ்வரனின் சகோதரன் யமன், யமனே பரணி நட்சத்திர அதி தேவதை ஆகும்.

துர்க்கை காயத்திரி மந்திரம் 

                                         ஓம் காத்யாயனாய வித்மஹே 
                                                கன்யா குமாரீய தீமஹி !
                                          தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !!

யம காயத்திரி மந்திரம் 

பாச தண்டோஜ்வல புஜத்வயம் மகிஷ வாகனம் !
யமம் நீலதனும் பீர்ம பரணி தேவதாம் பஜே !!

பரணி நட்சத்திர காயத்திரி 

ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி !
தந்நோ பரணி ப்ரசோதயாத் !!


பரணி நட்சத்திர பரிகார விருட்சம் 

பரணி நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நெல்லி மரம் ஆகும். தவா என்றால் கருநெல்லி என்று பொருள். மஹா விஷ்ணுவுக்கு மாதவா என்று பெயர் உண்டு. லக்க்ஷ்மியின் அம்சம் தவாவுடன் சேர்ந்ததால் மாதவா என்று பெயர் வந்ததாக பெரியோர்கள் சொல்கிறார்கள். பரணி  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்தபரணி  நட்சத்திரம் வரும் நாளில் நெல்லி  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நெல்லி  மரத்துக்கு நீர் உற்றுவதும், நெல்லி  மரத்தடியில்தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பரணி  நட்சத்திர அன்பர்கள் துர்க்கா  காயத்திரி, யம  காயத்திரி  மந்திரம், பரணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நெல்லி  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்

இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே"வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.

நாக தோஷம் ஜோதிட பார்வை







   நாக தோஷம் என்ற பெயரை கேட்ட உடனே அச்சப்படுகின்றனர் பலர். இது  தேவையற்ற பயமாகும். சரியான பரிகாரம் மூலம் இந்த தோஷத்தை நீக்கி கொள்ளலாம். ஜோதிட ரீதியாக இராகு மற்றும் கேது லக்னம் அல்லது இராசிக்கு 1,2,4,5,7,8,10,12 ம் இடங்களில் அமர்ந்தால் நாக தோஷம் என்று பொருள். இந்த நிலை உங்களுக்கு ஜாதகத்தில் இருந்தால் கோட்சார ரீதியில் அந்த இடங்களுக்கு இராகு, கேது வரும் காலங்களில் கெடு பலன்கள் நடைபெறுவதை காணலாம்.
              நாக தோஷம் தரும் கெடுபலன்களை இனி பார்ப்போம். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் தொடரும், கல்வி கெடும், நாணயம் தவறும், குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கும், சேமிப்பு இருக்காது, தயார் சுகம் கெடும், தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்காது, திருமணம் தடைபடும், புத்திர பாக்கியம் கெடும், பெண்களின் ஜதகமாயின்  கற்பிக்கு சோதனை வரும்.
             இத்தகைய பலன் உள்ளவர்கள் உடனே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்தல் கெடு பலன்கள் நீங்கி வாழ்வு சுகம் பெரும்.


தோஷங்கள் உண்டாகும் காரணம்

மனிதனுடைய பாவ கர்மங்கள் மூன்று வகைப்படும் . அவை 1.சஞ்சித கர்மம் ,2.பிராப்த கர்மம் 3.ஆகாமிய கர்மம் ஆகும் . அவைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம் .

           1.சஞ்சித கர்மம் :
                                               முன்னோர்கள் செய்த பவபுணியங்களின் பலனால் நமக்கு வரும் வினை பதிவு ஆகும் . இதில் நன்மையும் இருக்கும் , தீமையும் இருக்கும். இதில் வரும் நன்மையும், தீமையும் நாம் அனுபவித்தே தீரவேண்டும் இதில் யாருமக்கும்  விதிவிலக்கு இல்லை. இந்த கர்மத்தால் வரும் கெடுபலனை நீக்கும் பரிகாரம் எதுவும் கிடையாது.


         2.பிராப்த கர்மம் :
                                               இப்பிறவியில் நாம் நம் தொழில் மூலமாகவும் , அதிகாரத்தின் மூலமாகவும் நாம் செய்யும் நன்மை, தீமை. இதனையும் நாம் இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். இந்த கர்மத்தை நாம் பரிகாரம் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

       3. ஆகாமிய கர்மம்
                                               மனிதன் புற இச்சையில் மயங்கி மனதாலும் , பேச்சாலும் ,தன் நடவடிக்கைகளாலும் திரும்ப திரும்ப செய்யும் நன்மை தீமைகளின் வினை பதிவு ஆகும். இதில் நன்மையை செய்தல் நன்மையும் , தீமையை செய்தால் கேடுபலனும் உடனே நம்மை வந்தடையும். இந்த கர்ம பலனை நீக்க சில பரிகாரம் உண்டு. ஆயினும் நம் செயல்களிலும் மற்றம் வேண்டும்.

                   ''கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம்
                    உருவெடுத்தபின் கொண்ட வினைபதிவு பிராப்தம்
                    இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம்
                    ஒரு வினையும் வீண் போகா உள்ளடங்கிப் பின் விளைவம் ''

                         என்கிறார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. நாம் நம் கர்ம வினைகளுக்கு உண்டான பரிகாரங்களை செய்துகொண்டு, நாம் செய்யும் செயல்களையும் நல்லதாக மாற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதானே.

பாவத்தைப் போக்கும் சக்தி கங்கை நீருக்கு வந்தது ஏன்?

பகீரதன் செய்த தவத்தின் பயனாக ஆகாயத்தில் ஓடிய வானதி நதியே கங்கை என்ற பெயரில் பூமிக்கு வந்தது. அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கியதாக புராணம் கூறுகிறது. திரிவிக்ரம மூர்த்தியாக மண்ணையும், விண்ணையும் அளந்த திருமாலின் திருவடியை சத்தியலோகத்தில் தரிசித்த பிரம்மா அபிஷேகம் செய்து வழிபட்டார். அதுவே கங்கையாக பூலோகத்தில் ஓடுகிறது என்றும் சொல்வர். இப்படி தெய்வ சம்பந்தம் பெற்ற நதி என்பதால், பாவம் போகும் என்று 

எந்த தெய்வத்திற்கு.. தேங்காய் மூடியில் நெய் தீபம்!

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த தீபமேற்றி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மற்றபடி இதைப் பற்றிக் கூறுவதற்கு சாஸ்திர ரீதியாக செய்திகள் எதுவுமில்லை.

சனி திசை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து எல்லா கிரகங்களின் திசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரவே செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. சனிதிசை வந்து விட்டாலே சிரமம் என்றும் கருத வேண்டாம். ஜீவன பலத்தையும்(தொழில்), ஆயுள் பலத்தையும் தரும் அதிகாரம் சனி ஒருவருக்கே உண்டு. நீதி, நியாயத்திற்கு கட்டுப்படும் இவருக்கு, தர்ம நெறியில் வாழ்பவர்கள் யாவரையும் பிடிக்கும்.சனீஸ்வரர் ஜாதகத்தில் சுபபலம் பெற்றிருந்தால் ஆயுள், ஆரோக்கியம், தொழில், செல்வ வளம், நல்ல பணியாளர்கள், மக்கள் செல்வாக்கு உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Tuesday, May 20, 2014

சனி தோஷம் விலகும்!

திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் ஸ்ரீவைகுண்டத்தில் கைலாச நாதர் கோயிலில் சனி பகவானின் அம்சமாக ஈசன் விளங்குகிறார். இவரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.

நவகிரக நைவேத்யம்!

சூரியன்- கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல், சந்திரன்- பச்சரிசி பால்பாயசம், செவ்வாய்- பொங்கல், துவரை சேர்த்த வடை சாதம், புதன்- பச்சைப்பயறு சுண்டல் அல்லது புளியோதரை, குரு- கடலை சுண்டல், தயிர்சாதம், சுக்ரன்- மொச்சை சுண்டல், நெய்ப் பொங்கல், சனி- எள் சாதம், ராகு- உளுந்தம் பருப்பு சாதம், கேது- கொள்ளு சாதம் அல்லது சித்ரான்னம்.

ஐஸ்வர்யம் பெருக ..

திருவான்மியூர் தலத்தில் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தல ஈசனை தரிசிக்க அப்பைய தீட்சிதர் வந்தபேதது பெருமழை பொழிந்தது. தீட்சிதரால் சுவாமியின் முதுகுப் புறத்தையே தரிசிக்க முடிந்தது. ஈசனிடம்  திருமுக தரிசனம் வேண்டி முறையிட ஈசன் மேற்கு நோக்கி திரும்பிக் காட்சி தந்தார். ஈசன் மேற்கே திரும்பியதால் அம்பாள் சுவாமிக்குப் பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இங்கு அன்னையின் மண்டப விதானத்தில் அஷ்டலட்சுமி சக்கரம் உள்ளது. இங்கு நின்று வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

Monday, May 5, 2014

தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அணிந்திருக்கும் துணிகளை அங்கேயே விட்டு வருவது ஏன்?

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து ""நீலாஞ்சன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்!

முதலில் குணம்.. அப்புறம் பணம்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப்படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும்ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்யலஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும்ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்குஉண்டாகும் பலன்பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையேஉண்டாகும். அதனால்,அம்பிகை, தன்னைவழிபடுவோருக்குமுதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வவளம் அருள்கிறாள். 

Thursday, May 1, 2014

கண்களை மூடி இறைவனை வணங்கலாமா?

சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி  நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்யலாமா? இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.

ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள். இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். 

பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப் பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.