Tuesday, February 26, 2013

ப்ரதக்ஷிணம்

எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். 14.2 விநாயகருக்கு - ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு - இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு - மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் - நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு - ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.

ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?

பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம்-ஓம் இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன. ஒருவரை வரவேற்கும்போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம்- ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் அ+உ+ம என்ற மூன்றெழுத்துகளால் ஆனது ஆ எனும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து உ சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது ம எனும் ஒலியில் அது முடிவடைகிறது. இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று உலகங்களையும் குறிக்கின்றன.
 
இறைவன் இவை அனைத்துமாக, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாக விளங்குகிறான். இறைவன் (பிரம்மம்) உருவமற்றவன்; குணங்களற்றவன். ஓம் எனும் மந்திரத்தை உச்சரிக்கையில் இரண்டு ஓம் ஒலிகளுக்கிடையில் நிலவும் நிசப்தம் இறைவனைக் குறிக்கிறது. ஓம் பிரணவம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, இறைவனின் மகிமையைக் குறிக்கும் ஒலி அல்லது ஒலி வடிவம்! வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இறைவன் ஓம் அத: என்ற ஒலிகளை எழுப்பிய பிறகே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு வேலையைத் தொடங்கவதற்கு முன்பும் ஓம் என்று கூறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஓம் என்று கூறும்பொழுது எழும் ஓசை ஒரு மணியின் ஓசை போல் எதிரொலிக்க வேண்டும். அந்த ஒலி மனதை அமைதியில் ஆழ்த்தி ஒருமுகப்படுத்துகிறது. மனம் இந்த நுட்பமான ஒலியால் மூழ்கடிக்கப்படுகிறது. ஞானத்தை நாடுபவர்கள் ஓம் எனும் மந்திரத்தின் ஆழ்ந்த கருத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து முக்தியடைகின்றனர். ஓம் பலவிதமாக எழுதப்படுகிறது. பொதுவாக எங்கும் பயன்படுத்தும் வடிவம் விநாயகரைக் குறிக்கிறது. ஓம் என்ற எழுத்தின் மேல் உள்ள வளைவு தலையையும், அடிப்பாகம் வயிறையும், பக்கத்தில் உள்ள வளைவு துதிக்கைகளையும் குறிக்கின்றன. புள்ளிடன் கூடி அரைவட்டம் விநாயகரின் கையையும் அதில் உள்ள மோதகத்தையும் குறிக்கிறது. இவ்வாறு ஓம் வாழ்க்கையின் லட்சியம். அதனை அடையும் வழி, படைக்கப்பட்ட உலகம், படைப்பின் பின்னே உள்ள பேருண்மை, புனிதமான மற்றும் உலகாயதமான பொருட்கள், உருவமுள்ளவை, உருவமற்றவை ஆகிய அனைத்தையும் குறிப்பதாக உள்ளது.

Saturday, February 16, 2013

ஸ்கந்த காயத்ரி சொல்லுங்க! புத்தியும், ஞானமும் கிடைக்கும்

முருகனுக்குரிய மந்திரத்தை ஸ்கந்த காயத்ரி என்பர். இதனை தினமும் 12 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும். இதை செவ்வாயன்று சொல்வது சிறப்பு.

 ஓம் கார்த்திகேய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ
ஸ்கந்த ப்ரசோதயாத் 

பொருள்: சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே! நீ என் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்து.

சிவன் போற்றி

ஓம் அகிலேஸ்வரா போற்றி
ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
ஓம் அமுதீஸ்வரா போற்றி
ஓம் அமரேஸ்வரா போற்றி
ஓம் அனாதீஸ்வரா போற்றி
ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
ஓம் அத்தீஸ்வரா போற்றி
ஓம் அந்தகேஸ்வரா போற்றி

ஓம் அசரேஸ்வரா போற்றி
ஓம் ஆதீஸ்வரா போற்றி
ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
ஓம் கடம்பேஸ்வரா போற்றி
ஓம் கங்கேஸ்வரா போற்றி
ஓம் கபாலீஸ்வரா போற்றி
ஓம் கர்த்தமேஸ்வரா போற்றி

ஓம் காரணீஸ்வரா போற்றி
ஓம் காளத்தீஸ்வரா போற்றி
ஓம் காமேஸ்வரா போற்றி
ஓம் கும்பேஸ்வரா போற்றி
ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
ஓம் குமாரேஸ்வரா  போற்றி
ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
ஓம் குபேரேஸ்வரா போற்றி
ஓம் கேதாரீஸ்வரா போற்றி

ஓம் கோதுமேஸ்வரா போற்றி
ஓம் கோட்டீஸ்வரா போற்றி
ஓம் கோகானேஸ்வரா போற்றி
ஓம் சங்கரேஸ்வரா போற்றி
ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
ஓம் சர்வேஸ்வரா போற்றி
ஓம் சரண்யேஸ்வரா போற்றி
ஓம் சங்கமேஸ்வரா போற்றி
ஓம் சக்கரேஸ்வரா போற்றி
ஓம் சந்திரேஸ்வரா போற்றி

ஓம் சண்டகேஸ்வரா போற்றி
ஓம் சப்தேஸ்வரா போற்றி
ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
ஓம் சிவனேஸ்வரா போற்றி
ஓம் சித்தேஸ்வரா போற்றி
ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
ஓம் சுந்தரேஸ்வரா போற்றி

ஓம் சூலேஸ்வரா போற்றி
ஓம் ஸுமேஸ்வரா போற்றி
ஓம் சூரியேஸ்வரா போற்றி
ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
ஓம் செப்பேஸ்வரா போற்றி
ஓம் சையகேஸ்வரா போற்றி
ஓம் சைலேஸ்வரா போற்றி
ஓம் சொக்கேஸ்வரா போற்றி
ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
ஓம் சோமேஸ்வரா போற்றி

ஓம் ஞானேஸ்வரா போற்றி
ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
ஓம் தர்மகேஸ்வரா போற்றி
ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
ஓம் தாருவணீஸ்வரா போற்றி
ஓம் தானேஸ்வரா போற்றி
ஓம் தாரணேஸ்வரா போற்றி
ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
ஓம் தியாகேஸ்வரா போற்றி
ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி

ஓம் தீனேஸ்வரா போற்றி
ஓம் துந்தரேஸ்வரா போற்றி
ஓம் நந்திகேஸ்வரா போற்றி
ஓம் நந்தீஸ்வரா போற்றி
ஓம் நத்தேஸ்வரா போற்றி
ஓம் நடேஸ்வரா போற்றி
ஓம் நாகேஸ்வரா போற்றி
ஓம் நாடுகேஸ்வரா போற்றி
ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
ஓம் நீலேஸ்வரா போற்றி

ஓம் பத்மேஸ்வரா போற்றி
ஓம் பரமேஸ்வரா போற்றி
ஓம் பட்டீஸ்வரா போற்றி
ஓம் பத்திகேஸ்வரா போற்றி
ஓம் பாரதீஸ்வரா போற்றி
ஓம் பாண்டேஸ்வரா போற்றி
ஓம் பிரகதீஸ்வரா போற்றி
ஓம் பீமேஸ்வரா போற்றி
ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி

ஓம் புரானேஸ்வரா போற்றி
ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
ஓம் புவனேஸ்வரா போற்றி
ஓம் பூதேஸ்வரா போற்றி
ஓம் பூரணகேஸ்வரா போற்றி
ஓம் மண்டலீஸ்வரா போற்றி
ஓம் மகேஸ்வரா போற்றி
ஓம் மகா காளேஸ்வரா போற்றி
ஓம் மங்களேஸ்வரா போற்றி
ஓம் மணலீஸ்வரா போற்றி

ஓம் மௌலீஸ்வரா போற்றி
ஓம் யோகேஸ்வரா போற்றி
ஓம் வைத்தீஸ்வரா போற்றி
ஓம் இராமேஸ்வரா போற்றி
ஓம் ரோகணேஸ்வரா போற்றி
ஓம் லிங்கேஸ்வரா போற்றி
ஓம் லோகேஸ்வரா போற்றி
ஓம் வேங்கீஸ்வரா போற்றி

கடன் வாங்கி கோயிலுக்குப் போகலாமா?

கடவுள் மீது பக்தி செலுத்த ஆயிரம் வழிமுறைகள் உள்ளன. அதில் கோயில் வழிபாடு ஒருவிதம். அதற்காக கடன் வாங்கி கோயிலுக்குச் செல்ல வேண்டும் யாரும் சொல்லவில்லை. உங்கள் இஷ்டதெய்வத்திற்குரிய வழிபாட்டுப் பாடல்களை தினமும் குளித்தவுடன் பாராயணம் செய்யுங்கள். வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, ஐந்து ரூபாய் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கடவுளின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

அவஹந்தி ஹோமம் (விவசாயம்)


அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
விவசாயத்தில் நல்ல மகசூல் பெறவும், நாடு பசுமைப்புரட்சியில் சிறக்கவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும், "அவஹந்தி ஹோமம் நடத்த வேண்டும்

2013 பாம்பு ஆண்டு.. இதன் பலன் தெரியுமா?

பாரம்பரிய கலைகள் தமிழத்திலிருந்து சீனாவிற்கு இடம் பெயர்ந்தது, என வரலாற்று  ஆய்வாளர்கள், பல விதங்களில் நிரூபிக்க  முயற்சிக்கின்றனர். கலைகள் மட்டுமல்ல, காலண்டரும்  இங்கிருந்து தான் சென்றது, என்கிறார் மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா. சீன ஜோதிடமும் 12 ராசிச் சக்கரங்களை கொண்டுள்ளது. நமது முறையில் மாடு, ஆடு, மீன் போன்ற உயிரினங்களோடு, தராசு, குடம் போன்ற அம்சங்கள் ராசிச் சக்கரத்தில் உள்ளன. சீன ஜோதிடத்தில் 12 மிருகங்களை கொண்டே, ஒரு ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் குறிப்பிடப்படுகிறது. சீனாவில் 2012ம் ஆண்டு டிராகன் ஆண்டு. 2013ம் ஆண்டு பாம்பு ஆண்டு (பிப்., 10) பிறக்கிறது. நம்மூரைப் போல், புத்தாண்டு எப்படி அமைய போகிறதோ என பல தரப்பினர் எதிர்பார்ப்புகளில் உள்ளனர். அதே போன்று இங்கும் சீன ஜோதிடப்படி, 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி அமையப் போகின்றன,  என்பதை பெங்சூயி (சீன வாஸ்து) முறைப்படி கவிதா கணித்து உள்ளார். இதில் சில உதாரணங்கள் மட்டும்...

எலி ஆண்டு: 1900 -1912 - 1924 - 1936 - 1948 - 1960 - 1972 - 1984 - 1996 - 2008.
பணவரவு சீராக இருக்கும். ஜூன் மாதத்திற்கு  மேல் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கணவன், மனைவி கருத்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்
வீண் விவாதங்களை தவிர்க்கலாம்.

எருது ஆண்டு: 1901, 1913 - 1925, 1937 - 1949 - 1961 - 1973 - 1985 - 1997 - 2009.
எருது ஆண்டில் பிறந்தவர்களுக்கு 2013 அதிர்ஷ்ட ஆண்டு. பணியில் இருப்போருக்கு மேலதிகாரிகளின் பாராட்டு, வெளிநாட்டு வேலை, வேலையில் பதவி உயர்வு அனைத்தும் கிடைக்கும்.
இப்படி அனைத்து  ஆண்டுகளிலும் பிறந்தவர் களுக்கான ராசி பலன்கள் கணிக்க பட்டு உள்ளன.

முயல் ஆண்டு: 1903 -1915 - 1927 - 1939 - 1951 - 1963 - 1975 - 1987 - 1999.

புலி: 1902 - 1914 - 1929 - 1938 - 1950 - 1962 - 1974 - 1986 - 1988.

டிராகன்: 1904 - 1916 - 1924 - 1940 - 1952 - 1964 - 1976 - 1988 - 2000 - 2012.

பாம்பு: 1905 - 1917 -1929 - 1941 - 1953 - 1965 - 1977 - 1989 - 2001-2013

குதிரை: 1906 - 1918 - 1930 - 1942 - 1954 - 1966 - 1978 - 1990 - 2002.

ஆடு: 1097 - 1919 - 1931 - 1943 - 1955 - 1967 - 1979 - 1991 - 2003.

பன்றி: 1947 - 1959 - 1971 - 1983 - 1995 - 2007.

குரங்கு: 1908 - 1920 - 1932 - 1944 - 1956 - 1968 - 1980 - 1992 - 2004.

சேவல் : 1909 - 1921 - 1933 - 1745 - 1907 - 1969 - 1981 - 1993 - 2005.

நாய் : 1910 - 1922 - 1934 - 1946 - 1958 - 1970 - 1982 - 1994 - 2006.

இந்த ஜோதிட முறை இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நாடுக ளுக்கு இடையே உள்ள கேந்திர நிலையின் ஒற்றுமைகள் தான் என்கிறார்

பூஜையில் மணக்கும் சாம்பிராணி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

இறைவழிபாட்டில் சாம்பிராணி முக்கிய இடம் பெறுகிறது. பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பதற்காகவே பூஜையில் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இறைவழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன; அவற்றின் மருத்துவ குணங்கள் என்ன என்பது பலருக்குத் தெரியாது. சாம்பிராணி, பாஸ்வெல் லியா செர்ராட்டா எனப்படும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பிரா ங்கின்செ ன்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் தான் நாளடைவில் காய்ந்து, கடினமாகி சாம்பிராணி என்ற பெயரில் நமக்குக் கிடைக்கிறது.  ஆவியாக்கப்பட்ட சாம்பிராணியில் போஸ்வெல்யா, டர்பென்டைன் உள்ளிட்ட எண்ணெய்களை எடுக்கின்றனர். இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்க ப்படுகிறது. சோப்பு தயாரிப்பிலும் சாம்பிராணி பயன் படுத்தப்படுகிறது. சாம்பிராணி கிடைக்கும் பிராங்கின்சென்ஸ் மரத்திலிருந்துதான் கோந்தும் கிடைக்கிறது. இந்த கோந்துடன் தண்ணீர் சேர்த்து பெண்டோஸ் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இது இருமல், காமாலை, நாள் பட்ட புண், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

வீட்டில் சமையல் செய்வதும் யாகம் செய்வது போலதான் ..!

வீட்டில் உணவு சமைக்கும் போது சுகாதாரத்துடன் மட்டுமின்றி, பக்தி உணர்வுடன் சமைக்க வேண்டியதும் அவசியம். உணர்வு அலைகளுக்கு அதிக சக்தி உண்டு என்பதால், சமைக்கும்போது ஒரு யாகம் செய்வதுபோல, பக்தி உணர்வோடு- நல்ல எண்ணங்களோடு சமைக்க வேண்டும் ஏனென்றால் சாப்பிடும் உணவுதான் குருதியாகி பின் உணர்வுகளுக்கும் காரணமாகிறது. பொது இடங்களிலும் வீட்டிலும் எங்கு சமைத்தாலும் இதைக் கடைப்பிடித்தால் நல்லது இப்படி சமைக்கும்போது உணவில் உள்ள தோஷங்களை, பக்தி உணர்வு நீக்கிவிடும். அதுவும் திருமணம் மற்றும் பலபேருக்கு சமைக்கும் இடங்களை ஒரு யாகசாலைபோலதான் கருதவேண்டும் சமைப்பவர்களும் ஒரு ஹோமத்தை நடத்துபவர்கள் போலத்தான். உணவு விடுதிகளில் நல்ல உணர்வுகளுடன் சமைப்பவர்கள் சமைத்தால், உண்பவர்களது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மனஉணர்வுகளும் சீராக இருக்கும். சிலர் சமைப்பதை ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள் என்றால் எவ்வளவு புண்ணிய காரியம். எனவே சமையல் மூலமாகவும் உணவு மூலமாகவும் பக்தி உணர்வை வளர்க்க முடியும். நல்ல குணத்தோடு பக்தி உணர்வை வளர்க்க வளர்க்க, அது நம்மை எப்போழுதும் நல்லவனாக இருக்கச் செய்யும் யுத் பாவம் தத் பவதி நீ எதை நினைக்கிறாயோ, உணர்கிறாயோ அதுவாய் ஆகிறாய் என்பது வேதக்கூற்று.

Saturday, February 2, 2013

வேண்டாத சிந்தனை விலக...

வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம் ஏதும் இருக்காது. சிலர் இன்டர்வியூ கிளம்புவார்கள். பயத்தில் நாக்கு உலர்ந்து விடும். பதில் தெரிந்தாலும், மனோதைரியக் குறைவால் சொல்ல முடியாமல் தத்தளிப்பர். சிலர் இரவில் தனியாக வீட்டில் இருக்க பயப்படுவதும் உண்டு. தேவையற்ற இந்த பயத்தில் இருந்து தப்பிக்க வழிபடவேண்டிய தெய்வம் காளி. காளியை வழிபட்டால் பயம் பஞ்சாய் பறந்து விடும். தேவையற்ற பயமுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் காளிகோயிலுக்குச் சென்று வழிபடலாம். காளி கோயில் அருகில் இல்லையென்றால் துர்க்கையை வழிபடலாம். எலுமிச்சம்பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஓம் காளி என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை காளி அல்லது துர்க்கை முன் அமர்ந்து ஜெபியுங்கள். அந்த பழத்தைப் பிழிந்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து பிரசாதமாக அருந்துங்கள். நிச்சயம் பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.

  சிலருக்கு தோல் அலர்ஜி, தோல் வியாதிகள் இருப்பதுண்டு. இவர்கள் மருத்துவம் எடுத்தால் மட்டும் போதாது. டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து திருவிளக்கின் முன் வைத்து ஓம் காளி மந்திரத்தை 108 முறை ஜெபித்து, அதை அருந்த வேண்டும். இதற்கு சிறந்த பலன் வேகமாக கிடைக்கும்.

கடன் தொல்லையா ... கவலையை விடுங்க! (செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை )

கடன் தொல்லையா ... கவலையை விடுங்க! (செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை )



கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது. லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108முறை பாராயணம் செய்யவேண்டும். அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி உண்டாகும். தீராதபிரச்னைகள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுதல் நீங்கவும் இது சிறந்த பரிகாரம்.

காளிதேவியை பெண்கள் வழிபடலாமா?

இதிலென்ன சந்தேகம்! அவளே பெண்தானே! எந்த தெய்வத்தையும் யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.

இறந்தவர்களுக்காக சில கோயில்களில் தீபம் ஏற்றுவது ஏன்?

இதை மோட்சதீபம் என்பர். மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர் விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும் உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச தீபம். கோயில்களில் கோபுர உச்சியில் மாலைப் பொழுதில் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. சில கோயில்களில் கருவறையிலும் ஏற்றுகிறார்கள். மூன்று, ஐந்து என்ற எண்ணிக்கையில் ஏற்றலாம்.

லட்சியத்தை அடைய என்ன செய்வது?

தொண்டு, தானம், இரக்கமான செயல்கள், ஆகியவற்றின் மூலம் பிறரைச் சந்தோஷப்படுத்தினால், நீங்கள் இன்பத்தை விதைப்பதோடு, இன்பத்தையும் அறுவடை செய்வீர்கள். விதியை உயரிய எண்ணங்களாலும்,

நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.
தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள். உடம்புக்கு வெளியே கிடைக்கும் இன்பத்தால் ஒரு போதும் நிறைவு கிடைக்காது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
அனைத்து தீய பண்புகளும் கோபத்திலிருந்து புறப்படுகின்றன. கோபத்தை அடக்கிவிட்டால், தாமாகவே அனைத்து தீயகுணங்களும் தொலைந்து போகும்.  தீயவர்களைத் தண்டிப்பதையோ, நல்லவர்களை கவுரவிப் பதையோ இறைவன் செய்ய மாட்டான். நாம் செய்த செயல்களே நமக்கு பரிசு அல்லது தண்டனையைத் தருகின்றன.

பகைமை, பேராசை, தன்னலம், பொறாமை ஆகியவற்றை களைவதன் மூலம் இதயத் தோட்டத்தில் அமைதியை வளருங்கள், அப்போது தான் உங்களுடன் இருப்பவர்களுக்கும் அமைதியும், சமாதானமும் கிடைக்கும். உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினால், உங்கள் லட்சியத்தை அடைவது உறுதி. பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள். அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயத்தின் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.

உங்களை தாக்கும் ஆசைகளும், கஷ்டங்களும் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையை உங்களால் கட்ட முடியும். உங்கள் வருங்காலம், தலைவிதி, ஒழுக்கம் இவை அனைத்தும் உங்களின் எண்ணங்கள், செயல்கள் மூலமாகவே அமைகின்றன. வாழ்க்கையில் உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.

ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற எண்ணினால் அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் இவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மிருக குணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. இந்த தூய தன்மையை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்க்கையில் உயரலாம். -சிவானந்தர்.

அசரீரி என்பதன் பொருள் என்ன?

உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில் சரீரம் என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு சரீரி என்று பெயர். இதைப் போல தேவதைகளுக்கும் உருவம் உண்டு. அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது. இருந்தாலும், பக்தர்களை ஆட்கொள்ளும் விதத்தில் சப்த வடிவில் நம்மோடு தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல் வெறும் ஒலி வடிவில் கேட்பதை அசரீரி என்று குறிப்பிடுகிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?

நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு.

அந்த ஒருவர் நீங்களா?

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகச் சொல்வர். இந்த மும்மாரி பெய்தது என்பதற்கான பழம் பாடல் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா?..

வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே

மூதுரை என்னும் நூலில், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்வது போல, ஊரில் ஒரு நல்லவர் இருந்தாலும் போதும் அவருக்காகவே மழை பொழியும். அதன் பயன் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும், என்கிறார் அவ்வையார். அந்த ஒருவராகும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்பதே அவரின் எண்ணம்.

ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வணக்கம் தெரிவிப்பது ஏன்?

இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது நமஸ்தே அல்லது நமஸ்காரம் என்று கூறி வணக்கம் தெரிவிப்பது மரபு. இரண்டு உள்ளங்கைகளையும் நெஞ்சின் முன் ஒன்று சேர்த்தவாறு வைத்துக் கொண்டு, தலையைத் தாழ்த்தி நமஸ்காரம் என்று கூறுகிறோம்.
சம வயது உடையவர், நம்மைவிட, சிறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் வணக்கம் கூறித்தான் வரவேற்கிறோம். சாஸ்திரங்களில் ஐந்து வகையான மரபு வழிவரவேற்பு முறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நமஸ்காரம் என்பது ஒன்று. பொதுவாக நமஸ்காரம் என்றால் நெடுஞ்சான் கிடையாகக் கீழே விழுந்து வணங்குதல் என்று பொருள் கொள்ளப்படும் ஆயினும் இச்சொல் தற்காலத்தில் நாம் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் என்று கூறி வரவேற்பதையும் குறிக்கிறது.

ஏன் கூறுகிறோம்?: நமஸ்காரம் என்பது நமது பண்பாட்டின் அடையாளமான ஓர் வரவேற்புச் சொல். அது வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் அச்சொல்லின் பின்னே ஓர் உயர்ந்த தத்துவம் அடங்கியுள்ளது. சமஸ்கிருதத்தில் நமஸ்தே என்பது நமஹ+தே என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் நான் உங்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன் அல்லது எனது வணக்கங்கள் அல்லது நான் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்குகிறேன் என்பதாகும். நமஹ என்ற சொல்லிற்கு நமம (என்னுடையது அல்ல) என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு வணங்கும்போது மற்றவர் முன்பாக நமது அகங்காரம் வெகுவாகக் குறைந்து மறைந்தொழிகிறது.
இருவர் சந்திக்கும்போது அவர்களது மனங்கள் ஒன்றோடொன்று உறவாடுவதுதான் உண்மையான சந்திப்பாகும். நாம் ஒருவரை வணங்கி வரவேற்கும்போது நமஸ்காரம் என்கிறோம். இதன் பொருள் நம் இருவரின் மனங்கும் வகையில்தான் உள்ளங்கைகளை நெஞ்சின்முன் ஒன்றாகச் சேர்க்கின்றனர்.

சிரம் தாழ்த்தி வணங்குவது அன்பும் பணிவும் கலந்த நட்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் ஒரு செய்கை. இதன் பின் ஒரு ஆழ்ந்த ஆன்மிக உட்பொருளும் பொதிந்துள்ளது. என்னுள் உறைந்துள்ள உயிர்த் தத்துவமான, தெய்வத்தன்மையுடைய ஆன்மா அல்லது இறைவன்தான்ல, அனைத்திலும் நிறைந்து நிற்கிறான் என்ற உண்மையை உணர்ந்திருப்பதைக் காட்டவே, நாம் சந்திக்கும் மனிதரிடமும் எங்கும் நிறைந்த இறைவனை நாம் காண்பதைத் தெரிவிக்கும் வகையில் சிரசினைத் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.
இந்த உண்மைகளை நாம் உணரும், பொழுது நமது வரவேற்பு ஒரு சடங்காகவோ, கருத்தாழ மற்ற ஒரு சொல்லாகவோ இராது. மாறாக, ஒருவரை வரவேற்கையில், நமது வணக்கம் இருவருக்குமிடையே அன்பும், மரியாதையும் கலந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதன் பலனாக ஒருவருக்கொருவர் உணர்ச்சி பூர்வமாக உண்மையான உணர்வோடு ஒன்றிட வழிவகுக்கும்.

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?

தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். பாலூட்டி சீராட்டி கண் போல காத்தவள் தாய். திருமணம், பணிவாய்ப்பு போன்ற சுபவிஷயங்களின் போது பெற்றோரை வணங்க வேண்டியது அவசியம். பெற்றோருக்கு பாதபூஜை செய்வது இதற்காகவே. ஜோதிட ரீதியாக தாயை வழிபட்டவருக்கு சந்திரன் நன்மை அளிப்பதாகச் சொல்வர். சந்திராஷ்டம நாட்களில் தாயை வணங்குவது பிரச்னையைத் தீர்க்கும்.