Wednesday, December 29, 2010

வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்

காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரிர் ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்.

மந்திர உச்சாடனம் மந்திர உச்சாடனம்

"ஓம்"கார நமசிவாய "மூலமந்திரம்"
ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।


இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர சற்குரு அமைவார்।ஈசன் அருளால் அனைத்தும் கைவரப் பெறலாம்। தோல்வியே கிடையாது। புகழ் பெறுவர்। வசீகர சக்தி கிடைக்கும்।துஷ்ட சக்திகள் ஆண்டாது।

"ஓம் அகத்தீசாய நம‌
ஓம் நந்தீசாய நம‌
ஓம் திருமூலதேவாய நம‌
ஓம் கரூவூர் தேவாய நம‌"



ஓம் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா:-

ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதாய நம!



"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"


மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹாஸேனகுரும் வந்தே மஹாபய நிவாரணம்!!


சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்கப்ரணே தாரம் ப்ரணதோஸ்மி ஸ்தாசிவம்!!

பெருமாள் தமிழ் மந்திரம்
"அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்"

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி!


"தர நக சிவ உரு சிவா சிவா"

ஓம் அண்ணாமலை அரசே போற்றி!
ஓம் உண்ணாமுலை உவந்தாய் போற்றி!!


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!


ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமஹ‌



"ஓம் நமோ நாராயணாய"



"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி ச‌க்தி ம‌கா ச‌க்தி ப‌ராச‌க்தி ஓம்"

ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள்

ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள் :-"ஓம் வாக்தேவ்யை நம"

ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம்:-ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியைபுத ஜனன்னியை ஸ்வாஹா

கம்ப்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனை புரிய தினந்தோறும் 1008 முறை ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :-ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.

Monday, December 13, 2010

சகல ஐஸ்வரியங்கள் தரும் அஷ்டலட்சுமி!

ஆதிலட்சுமி: ஸ்ரீமத் நாராயணனோடு வைகுண்டத்தில் உறையும் இவளே, ரமா; மஹாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்வாள்; அன்னை லட்சுமியின் முதல் வெளிப்பாடு.

தானியலட்சுமி: தானியங்கள், கூலங்கள், காய்கனிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் நாயகி.

தைர்யலட்சுமி: துணிவும் நேர்மையும் தருபவள்.

கஜலட்சுமி: பாற்கடல் கடைந்தபோது, இவ்வடிவத்தில் லட்சுமி எழுந்தருளியதாக வேதவியாசர் குறிப்பிடுகிறார். முழுதும் மலர்ந்த தாமரைமீது அவள் அமர்ந்திருக்க, யானைகள் பால் கலசங்களிலிருந்து அவள்மீது பாலைப் பொழிந்து அபிஷேகிக்க, கரங்களில் தாமரை ஏந்தி, எல்லையற்ற கருணையோடு காட்சி தருகிறாள்.

சந்தானலட்சுமி: குழந்தைச் செல்வமும், நிரந்தரச் செழுமையும் தருபவள்.

விஜயலட்சுமி: வெற்றி தேவதை.

தனலட்சுமி: பொருட்செல்வம் அருள்பவள்.

வித்யாலட்சுமி: அறிவும் கல்வியும் ஞானமும் வழங்குபவள். எட்டு வகையாகப் பார்க்கப்பட்டாலும், அவளே ஆதிசக்தி.

Saturday, November 27, 2010

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

Wednesday, November 24, 2010

துர்கை - (ராகுதோஷ நிவர்த்திக்காக)

துர்கை

(ராகுதோஷ நிவர்த்திக்காக)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

Tuesday, November 16, 2010

ஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...

ஐயப்ப விரத முறை

கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும். குருசாமியின் கரத்தால் மாலை அணிய வேண்டும். குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து சுவாமியே சரணம் ஐயப்பா! உன் தரிசனம் தடையின்றி கிடைக்க வேண்டும். இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி முடிவதற்கு அருள்தருவாய், எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும். அன்றுமுதல் தினமும் குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி, 108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும். இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகலில் தூங்கக் கூடாது. பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும்.

அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும், இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன், என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும், ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை ஏற்கவே மாட்டான். விரதகாலத்தில், பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது. உரையாடும் போதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று கூற வேண்டும். இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும். கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்ய வேண்டும். நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது. பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும். மாலையணிந்தவர்கள் வீடு, திருமண வீடுகளில் மட்டும் உணவு அருந்தலாம். பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது. சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும், மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்க வேண்டும்.

மாலை அணியும் மந்திரம்

ஞானணித்ராம் சாஸ்த்ரு ணித்ராம் குருணித்ராம் நமாம் யஹம்
வனணித்ராம் சுக்த ணித்ராம் ருத்ர ணித்ராம் நமாம் யஹம்
சாந்தணித்ராம் சத்தியணித்ராம் வ்ருதுணித்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன ணித்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே -
சரணாகத ணித்ராக்யம் த்வன் ணித்ராம் தாரயா

இருமுடியில் வைக்கும் பொருட்கள்

இருமுடியில் முன்முடி, பின்முடி என இரு பிரிவு உண்டு. முன்முடியில் பூஜை பொருட்களையும், பின்முடியில் பக்தருக்குரிய சமையல் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட வேண்டும். பூஜைக்கு மஞ்சள்பொடி சிறிதளவு, மஞ்சள், பன்னீர் (சிறிய பாட்டில்), தேன் (சிறிய பாட்டில்), சந்தன வில்லைகள் பத்து, குங்குமம் சிறிய பாக்கெட், விபூதி பாக்கெட், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சை, உலர்ந்த திராட்சை (50 கிராம்), முந்திரி, (50 கிராம்), கல்கண்டு, அச்சுவெல்லம் (இரண்டு), அவல், அவல்பொரி, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய், காணிப்பொன் (குறைந்த விலையில் கிடைக்கும் தங்கத்தகடு), கருப்பு வளையல், திரிநூல், பெரிய தேங்காய் ஒன்று, சிறிய தேங்காய் மூன்று, பச்சரிசி அரை கிலோ, பசுநெய் -300 கிராம். இருமுடிகட்டும் போது, சுவாமியே சரணம் ஐயப்பா, பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, யாருடைய கட்டு, சாமியுடைய கட்டு, எப்போ பயணம், இப்போ பயணம், பகவானே- பகவதியே, பகவதியே- பகவானே, ஈஸ்வரனே- ஈஸ்வரியே, ஈஸ்வரியே-ஈஸ்வரனே, சுவாமியே.. ஐயப்பா என்ற சரண கோஷங்களை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சொல்ல வேண்டும். அனைவரும் கூற வேண்டும்.

ஐயப்பன் - பெயர்க்காரணம்?

ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும் என்றார். அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன் என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார். ராஜாவும் சபரிமலைக்கு அடிக்கடி செல்வார். பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆகிவிட்டதாக கர்ணபரம்பரைக் கதையுண்டு. நிஜத்தில் ஐயன் என்ற சொல்லே இப்படி மாறியிருக்கிறது. ஐயன் என்றால் தலைவன். அதனால் தான் பெரியவர்களை ஐயா என மரியாதையுடன் அழைக்கிறோம். ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை என்றாகிறது. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது விசேஷ அம்சமாகும்.

420 பவுன் தங்க அங்கி ஐயப்பனுக்கு மன்னர் சித்திரைத் திருநாள் மகாராஜாவால், ஒரு தங்க அங்கி காணிக்கையாக வழங்கப்பட்டது. இது 420 பவுன் (3.36 கிலோ) எடை கொண்டது. மண்டல பூஜையன்று இது சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த அங்கி கேரளாவிலுள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க மண்டலபூஜைக்கு சிலநாட்கள் முன்னதாக சபரிமலைக்குச் புறப்படுகிறது. கோழஞ்சேரி, பத்தனம்திட்டா வந்து மலையோலப்பட்டி தேவி கோயிலில் இரவு தங்குகிறது. மறுநாள் ரானி, வடசேரிக்கரை, நிலக்கல் வழியாகப் பம்பை வருகிறது. இங்கிருந்து பெட்டியில் வைக்கப்பட்ட அந்த அங்கி தலைச்சுமடாக சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது.

வெள்ளம்குடி பூஜை

கேரள மாநிலத்தில் சபரிமலை செல்லும் கன்னி சுவாமிகளுக்கான பூஜையை வெள்ளம் குடி, அல்லது படுக்கை என்பர். வீட்டின் கிழக்குப் பாகத்தில், வெள்ளைத்துணியால் பந்தல் அமைத்து அலங்கரிப்பர். பந்தலின் கீழே மேஜையிட்டு, கணபதி, மாளிகைப்புறத்தம்மன், மலை நடைபகவதி, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி, வாவர்சுவாமி ஆகியோரை சந்தனம் அல்லது மஞ்சள் உருண்டை பிடித்து வைத்து, அவற்றில் அந்தந்த தெய்வங்களை ஆவாஹனம் (எழுந்தருளச்செய்தல்) செய்வர். ஐயப்பன் படம் அல்லது சிறிய விக்ரகத்தை நடுவில் வைப்பர். அவர் முன்பு நெல் பரப்பி, அதன் மேல் ஒரு வாளை வைப்பர். மேடை முன்பு ஆழி (அக்னிகுண்டம்) ஏற்றுவர். மேடை முன்பு குத்துவிளக்கு ஏற்றி, அவல், பொரி, பழம் படைப்பர். தீபாராதனை நடந்த பின் ஐயப்பன்மார்கள், அக்னிகுண்டத்தை வலம் வந்து சுவாமியே சரணம் ஐயப்பா! என்று சரண கோஷம் எழுப்புவார்கள். சில பக்தர்கள் அருள் மிகுதியால் ஆழியிலுள்ள நெருப்பைக் கையால் வாரி எறிவார்கள். நாதஸ்வரம், செண்டை வாத்தியங்களோடு பக்திப் பரவசத்தில் திளைப்பார்கள்.

அவன் பார்த்துக் கொள்வாள்!

* கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான். செல்வத்தையும், செல்வாக்கையும் தேடுபவன். அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.
* ஒருவனது அகங்காரம் அவனது உடல் இருக்கும் வரை அவனை விட்டு முற்றிலும் நீங்குவதில்லை. அதன் அடையாளம் சிறிதளவேனும் எப்போழுதும் தங்கியிருக்கும்.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் தெரியும். குணத்தைப் பற்றி அறிந்தவன் குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
* நம்பிக்கை கொள். கடவுளை நம்பி இரு. பின்னர் நீயாக எதையுமே செய்ய வேண்டியிருக்காது. அன்னை காளி உன் பொருட்டுத் தானே அனைத்தையும் செய்வாள்.
* இறைவனை வெளியே தேடுதல் அறியாமை. தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு.
* கடவுள் கற்பக மரத்தைப் போன்றவர். நீ அவரிடம் வேண்டுவது உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வரும்தான் வேண்டுவதைப் பெறலாம்.
* பாம்பின் பற்களில் விஷமிருந்தாலும் பாம்புக்கு அதனால் சிறிதும் தீங்கில்லை. அது இறப்பதுமில்லை. ஆனால், பாம்பு எதையாவது தீண்டினால் தீண்டப்பட்டதற்கு அந்த விஷம் தீங்கு செய்கிறது. எனவே, கெட்டவர்களுடன் சேராதே.
* அனைத்து உயிர்களிடமும் சமமாய்க் காட்டப்படும் அன்பு, தயை எனப்படும். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்ற ஞானத்திலிருந்தே இந்தத் தயை உண்டாகிறது.
* மனிதன் ஒரு தலையணை உறைக்கு ஒப்பிடலாம். கருப்பு, சிவப்பு, பச்சை முதலிய பல நிறம் கொண்டவைகளாக இருக்கலாம். அவை எல்லாவற்றுக்குள்ளும் இருப்பதும் ஒரே பஞ்சு தான். அதுபோல், மனிதருள் சிலர் அழகாகவும், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் மட்டுமே உறைகிறான்.
* ஒருவன் சாப்பிட்ட உணவை அவன் விடும் ஏப்பத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், ஒரு ஞானியை நீ அணுகினால் அவர் உடனே கடவுளைப் பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்து விடுவார். ஆனால், உலகப்பற்றுள்ளவனோ, உலக விவகாரங்களைப் பற்றியே பேசுவான்.
* செம்பொன்னிற்கும், பித்தளைக்குமுள்ள வேறுபாடு உரைகல்லில் உரைப்பதால் தெரியவரும். அதுபோல நல்லவரையும், அல்லாதவரையும் அவரவர்களுடைய பக்தியினால் அறிய முடியும்.
* ஒருவனுக்கு உண்மைப் பக்தி தோன்றி, அவன் சாதனைகள் செய்யவிரும்பினால் பகவான் நிச்சயமாக அவனுக்குத் தகுந்த குரு ஒருவனை ஏற்படுத்துவார். அதைப்பற்றிய கவலையே வேண்டியதில்லை.
*விவேகமும் வைராக்கியமும் இல்லாமல், வேதநூல்களைக் கற்பதால் எந்தப்பயனுமில்லை.
* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே சாதனைகள் செய்து மனத்தை அடக்கி ஆள்பவனே உண்மை வீரன்.
* மனிதனுடைய மனம் தராசுக்கோல் போன்றது. இந்த மனத்தராசின் இருதட்டுகளில் இரண்டு வித எடைகள் உள்ளன. உலகத்தின் மீதும், பட்டம், பெருமை இவற்றின் மீதும் உள்ள பற்று ஒன்று. மற்றொன்று அறிவு, பற்றின்மை, கடவுளிடம் அன்பு முதலியவை.
* வெட்கம், வெறுப்பு, அச்சம் இவை மூன்றும் நம்மிடம் உள்ள வரையில் நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்காது.
* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மார்க்கமே ஆகும்.


ஜோதி வடிவில் ஐயப்பன்


இறைவனுக்கென்று உருவவழிபாடு வந்தது பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில், மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது.எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு முதலில் தோன்றியது. நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால் தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார். இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதேபோல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதிவடிவாக, காந்தமலையிலுள்ள பொன்னம்பலமேட்டில் மகரசங்கராந்தியன்று ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்


ஐயப்ப சுவாமி மெனு

சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை பூஜையில் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். அதாவது, விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். திருமதுரம் (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்யம் செய்யப்படும். பின்னர் நெய்யபிஷேகம் நடக்கும். மதிய பூஜைக்கு இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவை சேர்த்து, ஐயப்பனுக்கு பாயாசம் தயாரிக்கப்படுகிறது. இதை மகா நைவேத்யம் என்பர். நண்பகலுக்கு முன் 15 தீபாராதனைகள் நடக்கும். தீபாராதனையின் போது பச்சரிசி சாதம், இரவு பூஜைக்கு அப்பம், பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

இறை வணக்கம்

கற்பூர ஜோதி பிரியனே சரணம் ஐயப்பா!
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!
தேவர்கள் பூஜிதனே சரணம் ஐயப்பா!
சர்வரோக நிவாரணனே
சரணம் ஐயப்பா!

பொருள்: கற்பூர ஆழி தீபத்தை விரும்பி ஏற்கும் ஐயப்ப சுவாமியை சரணடைகிறேன். காந்தமலையில் ஜோதியாகக் காட்சி தரும் மணிகண்டனின் பாதங்களைப் பணிகிறேன். தேவர்கள் பூஜித்த கண்கண்ட தெய்வத்தை சரணாகதி அடைகிறேன். அனைத்து நோய்களையும் தீர்த்து நல்வாழ்வு தரும் ஐயப்ப சுவாமியின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன்.

காலை நேர ஸ்லோகம்

இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள்: ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும்
சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும்
ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து,
பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

Monday, November 15, 2010

தனலட்சுமி - செல்வம் பெற

தனலட்சுமி

(செல்வம் பெற)

ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்

Friday, November 12, 2010

சுக்கிரன் - (தடைபட்ட திருமணம் நடக்க)

சுக்கிரன்

 (தடைபட்ட திருமணம் நடக்க)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்



ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
   

Wednesday, November 10, 2010

குரு - (நல்ல மனைவி அமைய)

                 குரு

(நல்ல மனைவி அமைய)


ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்



ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்







ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்



ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்


ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

 

Tuesday, November 9, 2010

புதன் (படிப்பும், அறிவும் பெற)

புதன்

(படிப்பும், அறிவும் பெற)

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்



ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்


ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்


ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
    

Monday, November 1, 2010

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே
என பொருள்.

எலுமிச்சையின்  மகிமை

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

Sunday, October 31, 2010

கருடர் வழிபாடு- சமஸ்க்ருதம்

கருடர் வழிபாடு- சமஸ்க்ருதம்

கருடர் வழிபாடு 


மரணபயத்தை போக்கிட

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

Thursday, October 28, 2010

விரதங்கள் – 4

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,



முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.


நல்லூர் கந்தன்


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.

முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.

விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.

விரத பலன்

ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ

(முற்றும்)
  
   

 

Wednesday, October 27, 2010

விரதங்கள் – 3

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , ,


கார்த்திகை விரதம்



கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால்,  “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.  ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக் கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஷண்முகநாதன்
கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,


 “நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”

 என்கிறது.


தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.


விரத முறைகள்


தை மாதத்திலோ அல்லது முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகவோ இவ்விரதத்தைத் துவங்கலாம். முருகனையே துதித்து உபவாசம் இருக்க வேண்டும். இயலாதோர் காலை, பகல் உணவு தவிர்த்து, இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். 12 வருடங்கள் தொடர்ந்து பக்தியுடனும், உண்மையான நம்பிக்கையுடனும் இவ்விரதத்தை மேற்கொள்பவனுக்கு முருகனின் அருள் காட்சி கிட்டும் என்பது நம்பிக்கை. விரத நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது


இவ்விரதம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம். அவ்விரதத்துக்கு மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவிக்கு ஒளி உருவில் காட்சி கொடுத்ததுடன், தேவிக்கு இடப்பாகம் கொடுத்து ஏற்றுக் கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதனால்தான் அண்ணாமலையில் அந்த நாளில் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது


கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில் பசிபிணி இல்
லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்

கார்த்திகை விரதத்தின் பலன்



முறையாக ஒருவன் விரதம் மேற் கொள்ளும் போது அது வரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். வாழ்க்கை 
 ஒளிரும். தீவினைகள் அகலும். 

 
என்கிறது அருணாசல புராணம் (பாடல் – 159)


ஓம் சரவண பவ


(தொடரும்) 
 

 

Tuesday, October 26, 2010

விரதங்கள் – 2

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,


வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.




 
 
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
 
 
வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு  மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த  சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள்.  ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”
- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.


 
 
திருத்தணிகை முருகன்
 
 
 
செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.



“திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “


-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.


(தொடரும்)   


 
 
 
 

Monday, October 25, 2010

ஸ்ரீ குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது.




முருகனும் அவன் அடியாரும்…
 
 
 
ஓம் ஷண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி  பதயே நமோ நம!
ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!
************************
ஓம் சரவண பவ
 

ஷஷ்டி விரதம் - விரதங்கள் – 1





 விரதத்தின் பொருள்


விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.


விரதத்தின் பயன்


மனம் ஒடுங்க புலன் ஒடுங்கம். புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும். அகம் ஒடுங்க, ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அந்த ஆன்ம ஒளியை அகத்திலே கண்டு தரிசிப்பதே விரதத்தின் பயன். பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” என்பது ஆன்றோர் முது மொழி. அதை உள்ளபடி உணர்ந்து விரதம் இருக்க வேண்டும். இறையருள் பெற முயற்சிக்க வேண்டும்.





முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. செவ்வாய்க் கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்பன அவை. சிலர் வெள்ளிக் கிழமை விரதமும் முருகனுக்கு உகந்தது என்று கூறுவர். மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும்.


 
செவ்வாய்க் கிழமை விரதம்


இவ்விரதத்தை வலியுறுத்திக் கூறியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள். அடிகளார் உருவ வழிபாட்டை ஒறுத்து, ஜோதி வழிபாட்டையே வலியுறுத்தியவ்ர் என்றாலும், அவர் தனது ஆன்மப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவ வழிபாட்டையே மேற் கொண்டிருந்தார். திருத்தணிகைப் பெருமானையும், கந்த கோட்ட முருகனையும், ஒற்றியூர் வடிவுடை அம்மனையுமே அவர் முதற்கண் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்தார். தில்லை நடராஜரை தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட வள்ளலார்தான், பின்னர் அகத்திலே உள்ளொளி பெற்று அரு பெருஞ் சோதி ஆண்டவர் தரிசனம் பெற்று, அனைவருமே அதைக் கண்டு, வழிபட்டு உய்ய அழைத்தார்.


இனி, செவ்வாய்க் கிழமை விரதம்


(தொடரும்)





Thursday, October 14, 2010

ராஜராஜேஸ்வரி வழிபாடு

ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்க்ருதம்

(அழியாத ஐஸ்வர்யங்களையும், பதவி உயர்வையும் தரவல்லது)


ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்கம்-ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கும் பகவதி
ஸ்ரீ சண்டிகா தேவிக்கும் மிகவும் ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள்,  எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ,  பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை  பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள்

3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ
ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா
வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.


4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷõயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்


5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள். வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள். பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா-லோக-கடாக்ஷ வீ÷க்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.


ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம் (இந்த ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் பெருமை எட்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லப்படுகிறது என்பது விசேஷம். எட்டு ஸ்லோகங்கள் உள்ளதால் அஷ்டகம் எனப்படும் அருமருந்தாகிறது.)


      

Wednesday, October 13, 2010

குரு (வியாழன்) வழிபாடு- சமஸ்க்ருதம்

குரு (வியாழன்)  வழிபாடு- சமஸ்க்ருதம்


குரு (வியாழன்) மங்களாஷ்டகம்


ஜீவச்சோத்தர திங்முகோத்தரககுப் ஜாதோங்கிரோ கோத்ரத:
பீதோசவத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதி: சாபர்க்ஷமீநாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரிய: ஸிதபுதாராதி: ஸமோ பாநுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தக: சுபகர: குர்யாத் ஸதா மங்களம்


பொருள்: ஆங்கிரச கோத்ரியும், அரச சமித்தில் விருப்பமுள்ளவரும், தனுசு, மீனங்களின் தலைவரும், வடக்கு முகமாக சதுரபீட மண்டலத்தில் வீற்றிருப்பவருமான குரு மங்களத்தைச் செய்யட்டும்.

Tuesday, October 12, 2010

முருகன் வழிபாடு- தமிழ்

முருகன் வழிபாடு- தமிழ்


முருகன் போற்றி


ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றி
ஓம் திருவார் மறையின் செம்பொருள் போற்றி
ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி
ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
ஓம் இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றி
ஓம் உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி
ஓம் ஈசற் இனிய சேயே போற்றி
ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி
ஓம் உறுநரத் தாங்கும் உறவோய் போற்றி
ஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி

ஓம் ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றி
ஓம் கானில் வள்ளியின் கணவ போற்றி
ஓம் எழில்கொள் இன்ப வாரிதி போற்றி
ஓம் அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றி
ஓம் ஏறு மயிலூர்ந் தேகுவாய் போற்றி
ஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றி
ஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி
ஓம் செய்ய மேனியனே தேவே போற்றி
ஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
ஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி 



ஓம் ஓவற இமைக்கும் ஒளியே போற்றி
ஓம் மாமுதல் தடிந்த மறவ போற்றி
ஓம் ஒளவியம் அறுத்தோர்க் கருள்வாய் போற்றி
ஓம் தெய்வம் எல்லாந்தொழும் செய்யாய் போற்றி
ஓம் அஃகுதல் அற்றார் விளக்கே போற்றி
ஓம் கந்தா மணமார் கடம்பா போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயக போற்றி
ஓம் காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றி
ஓம் மூப்பீறற்ற முதல்வா போற்றி
ஓம் முத்தமிழ் முதல்வனே போற்றி  


ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கீழறும் அடியர் கிழிவோய் போற்றி
ஓம் ஏழல குந்தொழும் இறைவா போற்றி
ஓம் குன்றும் குழைதோட் குமர போற்றி
ஓம் என்றும் இளைய ஏறே போற்றி
ஓம் கூம்புகைத் தேவர் கோவே போற்றி
ஓம் பாம்பணி சிவனார் பாலக போற்றி
ஓம் கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றி
ஓம் அண்டினர்க் கருளும் அங்கண போற்றி
ஓம் கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி


ஓம் வீடில் வீடருள் விமல போற்றி 
ஓம் கைவேல் கொண்ட காவல போற்றி
ஓம் நைவேற் கருள்வாய் நாயக போற்றி
ஓம் கொடைக் கடன்கொண்ட குழக போற்றி
ஓம் படைக்கடல் தலைவ பரனே போற்றி
ஓம் கோதில் அமிழ்தே குருமணி போற்றி
ஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றி
ஓம் சிவபிரான் கண்வரு சேயே போற்றி
ஓம் நவசர வணத்தில் நகர்ந்தாய் போற்றி
ஓம் அறுவுரு அமைந்தே ஆடினாய் போற்றி


ஓம் அறுமீன் பாலுண் அமர போற்றி
ஓம் உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி
ஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
ஓம் நான் முகனைச் சிறை நாட்டினாய் போற்றி
ஓம் மான்மகள் வள்ளியை மணந்தாய் போற்றி
ஓம் செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றி
ஓம் அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றி
ஓம் இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றி
ஓம் மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் பரங்குன்றமர்ந்த பரம்பர போற்றி 


ஓம் திருச்செந்தில் வளர் சேவக போற்றி
ஓம் ஆவினன்கு குடி ஆண்டாய் போற்றி
ஓம் மேவி ஏரகம்வாழ் மிக்கவ போற்றி
ஓம் குன்று தோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் துன்று பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் திசைமுகம் விளக்கும் செம்முக போற்றி
ஓம் இசைபெரு வேள்வி இனமுக போற்றி
ஓம் செங்களம் ஓர்க்கும் திருமுருக போற்றி
ஓம் மங்கல மான வானவ போற்றி
ஓம் வள்ளிபால் நகைகொள் மாமுக போற்றி 


  ஓம் திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றி
ஓம் சிர்வளர் அழகின் செல்வா போற்றி
ஓம் மணிமுடி புனையாறணி முடி போற்றி
ஓம் துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றி
ஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றி
ஓம் கவித்தொடை புனைதோட் கந்தா போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றி
ஓம் என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றி
ஓம் பொருவில் ஒருவனாம் புலவ போற்றி 



ஓம் அருணகிரிக்குக் கருள் அமல போற்றி
ஓம் நக்கீரற் கருள் நாதா போற்றி
ஓம் தக்க சங்கத்தமிழ் தந்தாய் போற்றி
ஓம் குமர குருபரற் கருளினை போற்றி
ஓம் அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி
ஓம் பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றி
ஓம் கந்தபுரி வாழ்வுகந்தோய் போற்றி
ஓம் தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய் போற்றி
ஓம் பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றி
ஓம் கோழி வெல்கொடிக் கோவே போற்றி 


ஓம் ஊழி தோறூழி உள்ளாய் போற்றி
ஓம் செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றி
ஓம் மெய் யெலாம் வெண்ணீறணிவோய் போற்றி
ஓம் மேவலர் மடங்காலம் விசாக போற்றி
ஓம் மூவர்கள் போற்றும் முத்த போற்றி
ஓம் தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றி
ஓம் சேவலும் மயிலும் சேர்த்தோய் போற்றி
ஓம் போர்மிகு பொருந புரவல போற்றி
ஓம் ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றி
ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி 


ஓம் பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றி
ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி
ஓம் அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் களித்தருள் போற்றி
ஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றி
ஓம் இன்பார் இளைய ஏந்தால் போற்றி
ஓம் என்பால் அருள்புரி என்றும் போற்றி
ஓம் தமிழுக்குரிய பண்ணே போற்றி  
      

Monday, October 11, 2010

குபேரன் வழிபாடு - சமஸ்க்ருதம்

குபேரன் வழிபாடு - சமஸ்க்ருதம்

குபேரன் வழிபாடு

செல்வங்கள் நிலையாக இருக்க

ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

Friday, October 8, 2010

துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம்

                                                  துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம்

துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம்      
ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே


சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே


ஸர்வஸ்வரூபே ஸர்வேச ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ் திராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே.


துர்கா கவசம்


1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்


2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்


3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ


4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா


5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ


6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ


7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.


துர்கா அஷ்டோத்ரம்


ஓம் தேவ்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் த்ரிபுவநேச்வர்யை நம
ஓம் யசோதா கர்பஸப்பூதாயை நம
ஓம் நாராயண வரப்ரி யாயை நம
ஓம் நந்த கோப குல ஜாதாயை
ஓம் மங்கல்யாயை நம
ஓம் குலவர்த்திந்யை நம
ஓம் கம்ஸ வித்ராவண கர்யை
ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம


ஓம் சிலா தட விநிக்ஷிப் தாயை நம
ஓம் ஆகாசகாமிந்யை நம
ஓம் வாஸுதேவ பகிந்யை நம
ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம
ஓம் திவ்யாம்பரதராயை நம
ஓம் கட்க கேடக தாரிண்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் பாப தாரிண்யை நம
ஓம் வரதாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம


ஓம் குமார்யை நம
ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம
ஓம் பாலார்க ஸத்ருசாகா ராயை நம
ஓம் பூர்ண சந்த்ரநிபாந நாயை நம
ஓம் சதுர் புஜாயை நம
ஓம் சதுர் வக்த்ராயை நம
ஓம் பீந ச்ரோணி பயோத ராயை நம
ஓம் மயூர பிச்ச வலயாயை நம
ஓம் கேயூராங்கத தாரிண்யை நம
ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம


ஓம் க்ருஷ்ணாயை ஸங்கர்ஷண ஸமாந நாயை நம
ஓம் இந்த்ரத்வஜ ஸம நம
ஓம் பாஹுதாரிண்யை நம
ஓம் பாத்ர தாரிண்யை நம
ஓம் பங்கஜ தாரிண்யை நம
ஓம் கண்டா தாரிண்யை நம
ஓம் பாச தாரிண்யை நம
ஓம் தநுர் தாரிண்யை நம
ஓம் மஹா சக்ர தாரிண்யை நம
ஓம் விவிதாயுத தராயை நம


ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம
ஓம் சப்ந்ர விஸ்பர்திமுக விராஜிதாயை நம
ஓம் முகுடவிராஜி தாயை நம
ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம
ஓம் கௌமார வ்ரத தராயை நம
ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம
ஓம் த்ரிதச பூஜிதாயை நம
ஓம் த்ரை லோக்ய ரக்ஷிண்யை நம
ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம
ஓம் ப்ரஸந் நாயை நம


ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் விந்திய வாஸிந்யை நம
ஓம் காளயை நம
ஓம் காள்யை நம
ஓம் மஹாகாள்யை நம


ஓம் ஸீதுப்ரியாயை நம
ஓம் மாம்ஸப்பிரியாயை நம
ஓம் பசு ப்ரியாயை நம
ஓம் பூதா நுஸ்ருதாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் காமசாரிண்யை நம
ஓம் பாப பரிண்யை நம
ஓம் கீர்த்யை நம
ஓம் ச்ரியை நம
ஓம் த்ருத்யை நம



ஓம் ஸித்த்யை நம
ஓம் ஹரியை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸந்தத்யை நம
ஓம் மத்யை நம
ஓம் ஸந்த்யாயை நம
ஓம ரார்த்யை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் நித்ராயை
ஓம் ஜயோத்ஸ்நாயை நம


ஓம் காந்த்யை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் தயாயை நம
ஓம் பந்தந நாசிந்தை நம
ஓம் மோஹ நாசிந்யை நம
ஓம் புத்ராப ம்ருத்யுநாசிந்யை நம
ஓம் தநக்ஷய நாசிந்யை நம
ஓம் வ்யாதி நாசிந்யை நம
ஓம் ம்ருத்யு நாசிந்யை நம
ஓம் பய நாசிந்யை நம


ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் பக்த வத்ஸலாயை நம
ஓம் ஸெளக்யதாயை நம
ஓம் ஆரோக்ய தாயை நம
ஓம் ராஜ்ய தாயை நம
ஓம் ஆயுர் தாயை நம
ஓம் வபுர் தாயை நம
ஓம் ஸுத தாயை நம


ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம
ஓம் நகர ரக்ஷிகாயை நம
ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம
ஓம் சத்ருஸங்கட ரக்ஷிகாயை நம
ஓம் அடா வீதுர்க காந்தார ரக்ஷிகாயை நம
ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம
ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயி காயை நம
ஓம் துர்கா பரமேச்வர்யை நம

Tuesday, October 5, 2010

கிருஷ்ணன் வழிபாடு (சமஸ்க்ருதம்)

கிருஷ்ணன் வழிபாடு (சமஸ்க்ருதம்)


கிருஷ்ணாஷ்டோத்தரம்
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம
ஓம் கமலாநாதாய நம
ஓம் வாஸுதேவாய நம
ஓம் ஸநாதனாய நம
ஓம் வஸுதேவாத்மாஜாய நம
ஓம் புண்யாய நம
ஓம் லீலா மானுஷவிக்ரஹாய நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம
ஓம் யசோதா வத்ஸலாய நம
ஓம் ஹரயே நம

ஓம் சதுர்புஜாத்த சக்ராஸி நம
ஓம் கதாஸங்காத்யுதாயுதாய நம
ஓம் தேவகீ நந்தனாய நம
ஓம் ஸ்ரீ சாய நம
ஓம் ஸ்ரீநந்தகோபப்ரியாத் மஜாய நம
ஓம் யமுஞ வேகஸம் ஹாரிணே நம
ஓம் பலபத்ர ப்ரியானு ஜாய நம
ஓம் பூதனா ஜீவித ஹராய நம
ஓம் சகடாஸுர பஞ்ஜனாய நம
ஓம் நந்தவ்ரஜ ஜனாநந்தினே நம
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம


ஓம் நவனீத விலிப்தாங் காய நம
ஓம் நவனீத நடாய நம
ஓம் அனகாய நம
ஓம் நவனீத நவாஹாராய நம
ஓம் முககுந்த ப்ரஸாதகாய நம
ஓம் ÷ஷாடசஸ்த்ரீ ஸஹஸ்ரேஸாய நம
ஓம் த்ரி பங்கிநே நம
ஓம் லலிதா க்ருதயே நம
ஓம் ஸுகவாக ம்ருதாப் தீந்தவே நம
ஓம் கோவிந்தாய நம


ஓம் யோகினாம் பதயே நம
ஓம் வத்ஸவாட சராய நம
ஓம் அனந்தாய நம
ஓம் தேனுகாஸுர மர்தனாய நம
ஓம் திருணீக்ருத த்ருணாவர்தாய நம
ஓம் யமனார்ஜுன பஞ்ஜனாய நம
ஓம் உத்தாலதால பேத்ரே
ஓம் தமால ஸ்யாமலாக்ருதியே நம
ஓம் கோப கோபீஸ்வராய நம
ஓம் யோகினே நம


ஓம் கோடி ஸூர்யஸமப்ரபாய நம
ஓம் இளபதயே நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் யாதவேந்த்ராய நம
ஓம் யதூத்வஹாய நம
ஓம் வனமாலினே நம
ஓம் பீத வாஸஸே நம
ஓம் பாரி ஜாதா பஹாரகாய நம
ஓம் கோவர்த்தனாசலோத்தர்த்ரே நம
ஓம் கோபாலாய நம


ஓம் ஸர்வபாலகாய நம
ஓம் அஜாய நிரஞ்ஜனாய நம
ஓம் காம ஜனகாய நம
ஓம் கஞ்ஜ லோசனாய நம
ஓம் மதுக்னே நம
ஓம் மதுர நாதாய நம
ஓம் த்வாரகா நாய காய நம
ஓம் பலினே நம
ஓம் ப்ருந்தாவனாந்தஸஞ் சாரிணே நம
ஓம் துளஸீதாம பூஷணாய நம


ஓம் ஸ்யமந்தகமணேர் ஹர்த்ரே நம
ஓம் நர நாராயணாத் மகாய நம
ஓம் குப்ஜா க்ருஷ்ணாம் பரதராய நம
ஓம் மாயினே நம
ஓம் பரம புருஷாய நம
ஓம் முஷ்டிகாஸுர சாணூர மல்ல நம
ஓம் யுத்த விஸார தாய நம
ஓம் ஸம்ஸார வைரிணே நம
ஓம் கம்ஸாரயே நம
ஓம் முராரயே நம
ஓம் நர காந்த காய நம


ஓம் அனாதி ப்ரஹ்மசாரிணே நம
ஓம் க்ருஷ்ணா வ்யஸன கர்ஸகாய நம
ஓம் சிசுபால ஸுரஸ் சேத்ரே நம
ஓம் துர்யோதன குலாந்தகாய நம
ஓம் விதுராக்ரூர வரதாய நம
ஓம் விஸ்வ ரூப ப்ரதர்ஸகாய நம
ஓம் ஸத்யவாஸே நம
ஓம் ஸத்ய ஸங்கல்பாய நம
ஓம் ஸத்யபாமாரதாய நம
ஓம் ஜாயினே நம


ஓம் ஸுபத்ரா பூர்வஜாயே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் பீஷ்மமுக்திப்ரதாயகாய நம
ஓம் ஜகத்குருவே நம
ஓம் ஜகன்னாதாய நம
ஓம் வேணுநாத விஸாரதாய நம
ஓம் வ்ருஷபாஸுர நம
ஓம் வித்வம்ஸினே நம
ஓம் பாணா ஸுரபலாந்த காய நம
ஓம் யதிஷ்டிர ப்ரதிஷ்ட டாத்ரே நம

ஓம் பர் ஹிபர் ஹாவதம்ஸகாயே நம


ஓம் பார்த்த ஸாரதபே நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் கீதாம்ருத மஹோததயே நம
ஓம் காளீய பண மாணிக்ய நம
ஓம் ரஞ்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நம
ஓம் தாமோதராய நம
ஓம் யஜ்ஞபோக்த்ரே நம
ஓம் தான வேந்த்ர வினாஸகாய நம
ஓம் நாராயணாய நம
ஓம் பரப்ரஹ்மணே நம


ஓம் பந்னகாஸன நம
ஓம் ஜலக்ரீட ஸமாஸக்த கோபீ நம
ஓம் வஸ்த்ராபஹாரகாய நம
ஓம் புண்யஸ்லோகாய நம
ஓம் வேதவேத்யாய நம
ஓம் தயாநிதயே நம
ஓம் தீர்த்தபாதாய நம
ஓம் ஸர்வ பூதாத்மகாய நம
ஓம் ஸர்வ க்ரஹரூபிணே நம
ஓம் பராத் பராய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
      

Monday, October 4, 2010

முருகன் வழிபாடு - காயத்ரி மந்திரங்கள்

முருகன் வழிபாடு - சமஸ்க்ருதம்

காயத்ரி மந்திரங்கள்

(குஜதோஷம் தீர (செவ்வாய் தோஷம்)


1. ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஷண்முகஹ் ப்ரசோதயாத் 


2. ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்


3. ஓம் கார்திகேயாய வித்மஹே
வள்ளீநாதாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


4. ஓம் மஹாசேனாய வித்மஹே
ஷடானனாய தீமஹி
தன்னோ ஸ்கந்தஹ் ப்ரசோதயாத்


5. ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


6. ஓம் ஷடாணனாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


7. ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம் 


(தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். 

இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும். 


சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.


இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)

திருச்செந்தூர் - கந்தர் சஷ்டி கவசம்
 
காப்பு

நேரிசை வெண்பா


துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.


குறள் வெண்பா

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.




சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக


வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென


வசர ஹணபக வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்


சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண


ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் நிந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று


உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க



முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை யிரத்ந வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க


வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காரக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க


முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க


ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க  கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்


கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்


பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட


அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்


பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்


சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாக


உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழிப் பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா


கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை


நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றதுநீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்


வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய


பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்


மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி


அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி


திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்


சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்